
சென்னை: பொதுமக்கள் குடிநீர், கழிவுநீர் வரி மற்றும் கட்டணங்களை செலுத்த ஏதுவாக சென்னை குடிநீர் வாரியத்தின் அனைத்து வசூல் மையங்களும் வரும் ஞாயிற்றுக்கிழமை (செப்.28-ம் தேதி) இயங்கும்.
இது தொடர்பாக சென்னை குடிநீர் வாரியம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: சென்னை குடிநீர் வாரியத்துக்கு பொதுமக்கள் செலுத்த வேண்டிய 2025-ம் ஆண்டு மார்ச் முதல் செப்டம்பர் மாதம் வரையிலான முதல் அரையாண்டுக்கான குடிநீர், கழிவுநீரகற்று வரி, கட்டணங்கள் மற்றும் நிலுவைத் தொகையை செப்டம்பர் மாதம் 30-ம் தேதிக்குள் செலுத்த வேண்டும்.