• September 26, 2025
  • NewsEditor
  • 0

நொய்டா: சரக்கு மற்​றும் சேவை வரி​யில் (ஜிஎஸ்​டி) சீர்​திருத்​தங்​கள் மேலும் தொடரும் என்று பிரதமர் மோடி நேற்று தெரிவித்துள்ளார். கிரேட்டர் நொய்டாவில் உத்தர பிரதேச சர்​வ​தேச வர்த்தக கண்​காட்சி 2025-ஐ நேற்று தொடங்கி வைத்த பிரதமர் நரேந்திர மோடி கூறிய​தாவது: மக்​களின் சுமையை குறைக்​கும் வித​மாக மத்​திய அரசு வரி​களை கணிச​மாக குறைத்​துள்​ளது. பணவீக்​கத்தை கட்​டுப்​படுத்​தி​யுள்​ளது. இதனால், மக்​களின் வரு​மானம் மற்​றும் சேமிப்பு இரண்​டும் அதி​கரித்​துள்​ளது.

ரூ.12 லட்​சம் வரை வரு​மான வரி விலக்கு அளிப்​ப​தன் மூல​மும், புதிய ஜிஎஸ்டி சீர்​திருத்​தங்​களை செயல்​படுத்​தி​யதன் மூல​மும் மக்​கள் இந்த ஆண்டு மட்​டும் ரூ.2.5 லட்​சம் கோடியை சேமிக்க வழி ஏற்​பட்​டுள்​ளது. அதேபோன்​று, கடந்த 2017-ம் ஆண்டு ஜிஎஸ்​டியை அமல்​படுத்​தியதன் மூலம் மறை​முக வரி விதிப்​பில் சீர்​திருத்​தங்​களை அரசு அறி​முகப்​படுத்​தி​யது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *