
சென்னை: சென்னையில் அறிஞர் அண்ணா மாரத்தான் மற்றும் மிதிவண்டி போட்டிகள் நாளை தொடங்குவதாக மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: மறைந்த முதல்வர் அண்ணாவின் பிறந்தநாளையொட்டி சென்னை மாவட்ட அளவிலான அறிஞர் அண்ணா மாரத்தான் மற்றும் மிதிவண்டி போட்டிகள் சென்னை சிவானந்தா சாலையில் நாளை (செப்.27) நடைபெறுகின்றன. இதில் மாரத்தான் போட்டிகள் காலை 5.30 மணிக்கும், மிதிவண்டி போட்டிகள் காலை 7 மணிக்கும் தொடங்குகின்றன.