
சென்னை: கண்டிகை ஏரியை முறையாக அளவீடு செய்து ஆக்கிரமிப்புகளை 3 மாதங்களில் அகற்றி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டுமென உயர் நீதிமன்றம் உத்தரவி்ட்டுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம் நந்திவரம் கூடுவாஞ்சேரி பகுதியைச் சேர்ந்த பி.பாஸ்கர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில் கூறியிருந்ததாவது: வண்டலூர் அருகே உள்ள கண்டிகை ஏரி 11.4 ஏக்கர் பரப்பு கொண்டது. இந்த ஏரியில் பெரும்பாலான பகுதி ஆக்கிரமிக்கப்பட்டு தற்போது 5 ஏக்கர் மட்டுமே நீர்நிலையாக உள்ளது. அரசியல் செல்வாக்குமிக்க நபர்கள் நீர்நிலையை தாங்கல் புறம்போக்கு எனக்கூறி பட்டா பெற்று வருகின்றனர்.