
தூத்துக்குடி: சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்னும் காலம் இருக்கிறது. கடைசி நேரத்தில்கூட கூட்டணிக்கு கட்சிகள் வரலாம். இப்போது இருக்கின்ற கூட்டணி கூட பிரியலாம் என்று அதிமுக முன்னாள் அமைச்சரும், மாவட்டச் செயலாளருமான கடம்பூர் ராஜு எம்எல்ஏ கூறினார். தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் தொகுதிக்கு உட்பட்ட தாளமுத்துநகர் அருகே அதிமுக ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது.
இதில் பங்கேற்ற கடம்பூர் ராஜு, பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: 2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்காக முதன்முதலில் தேர்தல் களத்துக்கு வந்த இயக்கம் அதிமுகதான். கூட்டணியைப் பற்றி கவலைப்படும் கட்சிகளின் மத்தியில், மக்களை நம்பி தேர்தல் களத்துக்கு வந்தவர் அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி. இதுவரை 154 தொகுதிகளில் பிரச்சாரத்தை நிறைவு செய்து உள்ளார்.