
லே: வன்முறையால் பாதிக்கப்பட்ட லடாக்கில் பாதுகாப்பு நிலவரம் குறித்து துணநிலை ஆளுநர் உயர் அதிகாரிகளுடன் நேற்று ஆலோசனை நடத்தினார். இதனிடையே, பருவநிலை செயல்பாட்டாளரின் பாகிஸ்தான் தொடர்பு குறித்து சிபிஐ விசாரித்து வருகிறது.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கான சிறப்பு அந்தஸ்து கடந்த 2019-ம் ஆண்டு ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து, ஜம்மு-காஷ்மீர், லடாக் என 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டன. இந்நிலையில், ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் பகுதி மக்கள் தங்கள் பகுதிக்கு மீண்டும் மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என கோரி வருகின்றனர்.