• September 26, 2025
  • NewsEditor
  • 0

விழுப்புரம்: ​திண்​டிவனத்​தில் அதி​முக முன்​னாள் அமைச்​சரும், எம்​.பி.​யு​மான சி.​வி.சண்​முகத்​தை, பாஜக மாநிலத் தலை​வர் நயினார் நாகேந்​திரன் நேற்று சந்​தித்​தார். அதி​முக​வில் இருந்து பிரிந்து சென்​றவர்​களை ஒன்​றிணைக்க வேண்​டும் என்று தான் உட்பட 6 பேர் அதி​முக பொதுச் செய​லா​ளர் பழனி​சாமியை சந்​தித்து வலி​யுறுத்தி இருந்​த​தாக முன்​னாள் அமைச்​சர் செங்​கோட்​டையன் தெரி​வித்​திருந்​தார்.

இந்த 6 பேரில் சி.​வி.சண்​முகமும் ஒரு​வர். இந்​நிலை​யில், விழுப்​புரம் மாவட்​டம் திண்​டிவனத்​தில் வசிக்​கும் சி.​வி.சண்​முகத்​தை, பாஜக மாநிலத் தலை​வர் நயி​னார் நாகேந்​திரன் நேற்று சந்​தித்​துப் பேசி​னார். இரு​வரும் சுமார் 30 நிமிடங்​கள் ஆலோ​சனை நடத்தினர்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *