
புதுடெல்லி: நாட்டில் முதல்முறையாக ரயிலில் இருந்து ‘அக்னி பிரைம்’ ஏவுகணையை, இலக்கை நோக்கிசெலுத்தி இந்தியா வெற்றிகரமாக பரிசோதனை செய்தது. இதன்மூலம், ரயில் ஏவுதளம் வைத்துள்ள ஒருசில நாடுகள் பட்டியலில் இந்தியாவும் இணைந்துள்ளது.
பாதுகாப்பு படைகளுக்கு தேவையான பல வகை ஏவுகணைகளை ராணுவ ஆராய்ச்சி, மேம்பாட்டு நிறுவனம் (டிஆர்டிஓ) தயாரிக்கிறது. தரையில் இருந்து மட்டுமின்றி, ராணுவ வாகனங்கள்,போர்க்கப்பல்களில் அமைக்கப்படும் ஏவுதளம் என பல வகையான ஏவுதளங்களில் இருந்து இந்த ஏவுகணைகள் சோதனை செய்யப்பட்டு படைகளில் சேர்க்கப்பட்டுள்ளன.