• September 25, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: தமிழகம் முழுவதும் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டப் பணியில் ஈடுபட்டுள்ள வருவாய்த் துறை அலுவலர்கள் இன்று பணிப் புறக்கணிப்பு போராட்டத்தை தொடங்கினர்.

இது குறித்து வருவாய்த் துறை சங்கங்களின் கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளரும், தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலர் சங்கத்தின் மாநிலத் தலைவருமான எம்.பி.முருகையன் கூறும்போது, “‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமை ஒரு வாரத்தில் 4 அல்லது 5 நாட்கள் நடத்தச் சொல்கிறார்கள். தினமும் ஆயிரக்கணக்கில் மனுக்கள் பெறப்படுகின்றன. அவற்றை அன்றே இணைய தளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டியுள்ளது. இந்தப் பணிகளை முடிக்க நள்ளிரவு வரை ஆகிவிடுகிறது. அதற்குப் பின் கூகுள் மீட் மூலம் ஆய்வு கூட்டம் நடத்துகிறார்கள்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *