• September 25, 2025
  • NewsEditor
  • 0

மும்பை: நாட்டில் நடந்து வரும் வாக்குத் திருட்டை நிறுத்துமாறு ஜென் ஸீ தலைமுறைக்கு ராகுல் காந்தி விடுத்த வேண்டுகோளை விமர்சித்துள்ள மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், 'ராகுல் காந்தி வேண்டுமானால் நேபாளத்திலேயே தங்கிக் கொள்ளலாம்’ என்று கூறியுள்ளார்.

தனியார் தொலைக்காட்சி நடத்திய மாநாட்டில் பேசிய தேவேந்திர பட்னாவிஸ், “நேபாளத்தை நேசிக்கும் எவரும் அங்கேயே தங்கிக் கொள்ளலாம். இந்திய இளைஞர்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்க நேரமில்லை, ஜென் ஸீ தலைமுறையினர் வித்தியாசமாக சிந்திக்கிறார்கள். அரசாங்கத்தை வீழ்த்த ராகுல் காந்திக்கு எடுக்கும் முயற்சிகள் வெற்றிபெறாது. ஜென் ஸீ-க்கு அவர் விடுத்த வேண்டுகோள் வேலை செய்யாது" என்று கூறினார்

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *