
புதுச்சேரி: பொறியியல் கல்லூரி பேருந்திலிருந்து விழுந்த மாணவர் பலியான நிலையில், தரமற்ற பேருந்துகளை இயக்குவதாக கல்லூரியில் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுச்சேரியை சேர்ந்த மாணவன் அர்ஜூன். மதகடிப்பட்டு மணக்குள விநாயகர் பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு பொறியியல் படிப்பு படித்து வந்தார். வழக்கம்போல் கல்லூரி பேருந்தில் நேற்று மாலை வகுப்பு முடித்து வீட்டுக்கு வந்தார். கல்லூரி பேருந்தின் படிக்கட்டில் பேருந்து கதவில் சாய்ந்தபடி வந்தபோது, திடீரென பேருந்தின் கதவு திறந்து நிலைதடுமாறி சாலையில் விழுந்தார்.