
புதுடெல்லி: “பல்வேறு நிகழ்ச்சிகளில் வழங்கப்பட்ட பரிசுப் பொருட்களின் ஏலம் நடை பெற்று வருகிறது. அதில் நாட்டு மக்கள் பங்கேற்க வேண்டும். ஏலத்தில் கிடைக்கும் நிதி, கங்கை நதி தூய்மைக்குப் பயன்படுத்தப்படும்’’ என்று பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார். கடந்த 2014-ம் ஆண்டு பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்றார்.
அதன்பின், அவர் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் வழங்கப்படும் நினைவுப் பரிசுகள், வெளிநாட்டு பயணங்களின் போது அளிக்கப்படும் பரிசுப் பொருட்களை சேகரித்து வைத்து ஏலத்தில் விட்டு வருகிறார். அதில் கிடைக்கும் தொகையை கங்கை நதியை தூய்மைப்படுத்தும் பணிக்குப் பயன்படுத்தி வருகிறார்.