
காலங்காலமாக மக்கள் தங்கள் உரிமைகளை மீட்க மற்றும் நிலைநாட்ட, நீதி கேட்க, அடக்குமுறையை எதிர்க்க, சுதந்திரம் பெற என எல்லாவற்றிற்கும் போராட்டங்கள்தான் பதிலும், பலனும் கொடுத்துள்ளன என்பது உலக வரலாறு. சமீப ஆண்டுகளாக உலகின் பல்வேறு நாடுகளும் பல போராட்டங்களைக் கண்டுவருகின்றன. அதில் பலவும் வன்முறைப் போராட்டங்களாக மாறிவிடுகின்றன என்பதுதான் வேதனை.
போராட்டக் களங்களின் நாயகர்களாக இப்போதெல்லாம் பெரும்பாலும் இளைஞர்கள் இருக்கின்றனர். அதுவும், அண்மையில் நேபாளத்தில் ஆட்சி மாற்றத்துக்கு காரணமாயிருந்தனர் ஜென் ஸீ இளைஞர்கள். தற்போது, அதே பாணியில் நம் நாட்டில் லடாக்கில் ஒரு போராட்டம் வெடித்துள்ளது. யூனியன் பிரதேசமான லடாக்கில் போராட்டம் நடந்தது ஏன்? அது வன்முறையாக வெடித்ததற்குக் காரணம் என்ன?. லடாக்வாசிகளின் கோரிக்கைதான் என்ன என்பன பற்றி சற்று விரிவாகப் பார்ப்போம்.