
புதுடெல்லி: பல்வேறு வழக்குகளில் சிக்கிய ஆஸம் கான் 23 மாத சிறைக்கு பின் ஜாமீனில் விடுதலையாகி உள்ளார். இவரை வரவேற்க சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ் செல்லாததால் உத்தரப்பிரதேச அரசியலில் சர்ச்சை கிளம்பியுள்ளது.
கடந்த 2017-ல் பாஜக ஆட்சிக்கு வரும் வரை உ.பி அரசியலில் ஆதிக்கம் செலுத்தி வந்தவர் ஆஸம்கான். சமாஜ்வாதி நிறுவனர் முலாயம் சிங்கின் வலதுகரமான இவர், உ.பி முஸ்லிம்களின் முகமாக கட்சியில் இருந்தார். ஆஸம்கான் அனுமதி இன்றி கட்சியில் எந்த மாற்றமும் வராத சூழல் இருந்தது.