• September 25, 2025
  • NewsEditor
  • 0

லே: ல​டாக்​கில் மாநில அந்​தஸ்து கோரி நேற்று நடை​பெற்ற போராட்​டத்​தில் கலவரம் வெடித்​தது. இதில் 4 பேர் உயி​ரிழந்​தனர். 60-க்கும் மேற்​பட்​டோர் காயம் அடைந்​தனர். காஷ்மீரில் இருந்து லடாக் யூனியன் பிரதேசம் உரு​வாக்​கப்​பட்​டது. இந்​நிலை​யில் கடந்த 3 ஆண்​டு​களுக்​கும் மேலாக லடாக் மக்​கள் தங்​கள் பகு​திக்கு மாநில அந்​தஸ்​தும் நிலம், கலாச்​சா​ரம் மற்​றும் வளங்​களை பாது​காக்​கும் வகை​யில் அரசி​யல் சாசன பாது​காப்​பும் கோரி வரு​கின்​றனர்.

லடாக் பகு​திக்கு மாநில அந்​தஸ்​தும் அரசி​யலமைப்பு சட்​டத்​தின் 6-வது அட்​ட​வணை​யில் லடாக்கை சேர்க்க வலி​யுறுத்​தி​யும் பரு​வநிலை செயற்​பாட்​டாளர் சோனம் வாங்​சுக் கடந்த 2 வாரங்​களாக உண்​ணா​விரதம் மேற்​கொண்டு வந்​தார். இந்​நிலை​யில் அவரது போராட்​டத்​துக்கு ஆதரவு அளிக்​கும் வகை​யில் லடாக்​கில் நேற்று முழு அடைப்பு போராட்​டத்​துக்கு ‘லே அபெக்ஸ் பாடி' என்ற அமைப்​பின் இளைஞர் அணி அழைப்பு விடுத்​தது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *