
சென்னை: ஐ.நா. சபையின் டிஜிட்டல் மற்றும் வளரும் தொழில்நுட்பங்களுக்கான அலுவலகத்தின் சிறப்பு மையமாக சென்னை ஐஐடியை மத்திய அரசு பரிந்துரை செய்துள்ளது என்று மின்னணுவியல், தகவல் தொழில்நுட்பத்துறை செயலர் எஸ்.கிருஷ்ணன் தெரிவித்தார்.
தற்போதைய செயற்கை நுண்ணறிவு (ஏஐ) காலச்சூழலில் சவால்களை திறம்பட கையாள்வதற்காக டிஜிட்டல் மற்றும் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களுக்கான அலுவலகத்தை (ODET) ஐக்கிய நாடுகள் சபை அமைத்துள்ளது. அதன்படி, ஒவ்வொரு நாடும் ஐ.நா. சபையின் இந்த அலுவலகத்தால் ஆதரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களை அடையாளம் காட்ட வேண்டும்.