
சென்னை: தென் மண்டல ரயில்வே லோகோ பைலட்டுகள் (ரயில் ஓட்டுநர்கள்) சென்னையில் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கடந்த ஆண்டு ஜனவரி 1-ம் தேதி முதல் கிலோ மீட்டர் அலவன்ஸினை 25 சதவீதம் உயர்த்த வேண்டும்; கிலோ மீட்டர் அலவன்ஸுக்கு வருமான வரி விலக்கு உச்ச வரம்பு உயர்த்த வேண்டும்; பணியின் போது இயற்கை அழைப்புக்கும், உணவு இடைவேளைக்கும் நேரத்தை வரையறுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தென் மண்டல ரயில்வே லோகோ பைலட்டுகள் (ரயில் ஓட்டுநர்கள்) சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.