
சென்னை: விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டவரின் மரணம் தொடர்பான கொலை வழக்கில், உதவி ஆய்வாளர் மற்றும் இரண்டு தலைமைக் காவலர்களுக்கு ஆயுள் தண்டனை விதித்து சென்னை அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கடந்த 2009ஆம் ஆண்டு மார்ச் மாதம், குட்டி பழனி என்கிற பழனி குடிபோதையில் தகராறு செய்வதாக வந்த புகாரில், அவரை விசாரணைக்கு அழைத்துச் சென்ற சென்னை கோட்டூர்புரம் காவல் நிலையத்தினர், மருத்துவ பரிசோதனைக்கு ஒத்துழைக்கவில்லை எனக் கூறி கடுமையாக தாக்கியுள்ளனர்.