• September 24, 2025
  • NewsEditor
  • 0

ராய்ப்பூர்: சத்​தீஸ்​கர்​-ம​கா​ராஷ்டிர மாநில எல்​லை​யில் நேற்று முன்​தினம் நடந்த துப்​பாக்​கிச் சண்​டை​யில் மாவோ​யிஸ்ட் தலை​வர்​கள் ராஜு தாதா (எ) காட்டா ராமச்​சந்​திர ரெட்​டி, கோசா தாதா காதரி சத்​ய​நா​ராயண ரெட்டி ஆகியோர் உயிரிழந்தனர். இவர்​கள் இரு​வரும் சிபிஐ(​மாவோ​யிஸ்ட்) இயக்​கத்​தின் மத்​தி​யக் குழு உறுப்​பினர்​களாக செயல்​பட்டு வந்​துள்​ளனர்.

இதுகுறித்து நாராயண்​பூர் போலீஸ் எஸ்​.பி. ராபின்​சன் நேற்று செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: என்​க​வுன்ட்​டரில் இறந்த 2 மாவோ​யிஸ்ட் தலை​வர்​களுக்​கும் தலா ரூ.40 லட்​சத்தை வெகும​தி​யாக சத்​தீஸ்​கர் அரசு அறி​வித்​திருந்​தது. அபுஜ்​மார் மண்​டலத்​தில் மாவோ​யிஸ்ட்​களின் நடமாட்​டம் இருப்​ப​தாக தகவல் வந்​ததையடுத்து இங்கு போலீ​ஸார் தேடு​தல் வேட்​டை​யில் ஈடு​பட்​டனர்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *