
சென்னை: தமிழ்நாடு உறுப்பு மாற்று ஆணையத்தின் சார்பில் உறுப்பு தான தினம்-2025 நிகழ்ச்சி சென்னையில் நேற்று நடைபெற்றது. இதில் உறுப்பு கொடையாளர் குடும்பத்தினருக்கு சிறப்பு செய்து, உறுப்பு மாற்று சிகிச்சையில் சிறப்பாக பணியாற்றிய மருத்துவர்களுக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் விருதுகள் வழங்கினார்.
தொடர்ந்து, வருடாந்திர அறிக்கை மற்றும் மேம்படுத்தப்பட்ட செயலி விடியல் 2.0 ஆகியவற்றை வெளியிட்டு, உறுப்பு கொடையாளர்களுக்கு மலரஞ்சலி மற்றும் இசையஞ்சலி செலுத்தினார்.