
புதுடெல்லி: பாதுகாப்பு படையினருக்கு மத்தியப் பிரதேசத்தில் அடுத்த மாதம் 6-ம் தேதி முதல் 10-ம் தேதி வரை ட்ரோன் பயிற்சி நடைபெறுகிறது. ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலின் போது, பாகிஸ்தான் படையினர் துருக்கி அளித்த ட்ரோன்களை அதிகளவில் பயன்படுத்தின.
இவற்றில் சிலவற்றில் ஆயுதங்களும், மற்றவைகளில் கேமிரா மட்டுமே இருந்தன. இந்திய எல்லைப் பகுதிகளின் நிலவரத்தை அறிந்து கொள்வதற்காக இந்த ட்ரோன்கள் அனுப்பப்பட்டன. ஆனால், இவற்றை நமது வான் பாதுகாப்பு கருவிகள் நடுவானில் சுட்டு வீழ்த்தின.