
புதுடெல்லி: பிஹார் அரசு துறைகளில் காலியாக உள்ள 1.20 லட்சம் இடங்களை நிரப்ப வேண்டும். உடனடியாக தேர்வு அட்டவணையை வெளியிடக் கோரி தலைநகர் பாட்னாவில் கடந்த 19-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இதில் ஏராளமான இளைஞர்கள் பங்கேற்று, முதல்வர் நிதிஷ் குமாரின் வீட்டை முற்றுகையிட முயன்றனர். அப்போது போலீஸார் தடியடி நடத்தி போராட்டக்காரர்களை விரட்டியடித்தனர்.
இந்த வீடியோவை மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி சமூக வலைதளத்தில் நேற்று வெளியிட்டார். அதோடு பிரதமர் நரேந்திர மோடி மரம் நடுவது, குழந்தைகளின் பாடலை கேட்பது, வனப்பகுதியை பார்வையிடுவது, மயில்களுக்கு உணவு அளிப்பது, உடற்பயிற்சி செய்வது தொடர்பான வீடியோவையும் அவர் வெளியிட்டு உள்ளார்.