• September 24, 2025
  • NewsEditor
  • 0

புதுடெல்லி: பிஹார் அரசு துறை​களில் காலி​யாக உள்ள 1.20 லட்​சம் இடங்​களை நிரப்ப வேண்​டும். உடனடி​யாக தேர்வு அட்​ட​வணையை வெளி​யிடக் கோரி தலைநகர் பாட்​னா​வில் கடந்த 19-ம் தேதி ஆர்ப்​பாட்​டம் நடத்​தப்​பட்​டது. இதில் ஏராள​மான இளைஞர்​கள் பங்​கேற்​று, முதல்​வர் நிதிஷ் குமாரின் வீட்டை முற்​றுகை​யிட முயன்​றனர். அப்​போது போலீ​ஸார் தடியடி நடத்தி போராட்​டக்​காரர்​களை விரட்​டியடித்​தனர்.

இந்த வீடியோவை மக்​களவை எதிர்க்​கட்​சித் தலை​வர் ராகுல் காந்தி சமூக வலை​தளத்​தில் நேற்று வெளி​யிட்​டார். அதோடு பிரதமர் நரேந்​திர மோடி மரம் நடு​வது, குழந்​தைகளின் பாடலை கேட்​பது, வனப்​பகு​தியை பார்​வை​யிடு​வது, மயில்​களுக்கு உணவு அளிப்​பது, உடற்​ப​யிற்சி செய்​வது தொடர்​பான வீடியோவை​யும் அவர் வெளி​யிட்டு உள்​ளார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *