
கொச்சி: சொகுசு கார் வரி ஏய்ப்பு தொடர்பாக கேரளாவில் நடிகர்கள் துல்கர் சல்மான், பிருத்விராஜ் உள்ளிட்ட பலரது வீடுகள் மற்றும் ஷோரூம்களில் வருவாய் புலனாய்வு மற்றும் சுங்கத் துறை அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர்.
சொகுசு கார் வரி ஏய்ப்பு புகார் தொடர்பாக வருவாய் புலனாய்வு மற்றும் சுங்கத் துறை அதிகாரிகள் ‘நும்கோர்' என்ற குறியீட்டுப் பெயரில் நாடு தழுவிய நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். இதில் கேரளா முக்கிய கவனம் பெற்றுள்ள நிலையில் இம்மாநிலத்தில் திருவனந்தபுரம், எர்ணாகுளம், கோட்டயம், கோழிக்கோடு, மலப்புரம் ஆகிய மாவட்டங்களில் 30 இடங்களில் அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர்.