
நாமக்கல் / உடுமலை: நாமக்கல், கோவை, உடுமலையில் கோழிப்பண்ணை உரிமையாளர்களின் வீடுகள், அலுவலகங்களில் வருமான வரித் துறை அதிகாரிகள் நேற்று சோதனை மேற்கொண்டனர். நாமக்கல் மோகனூர் சாலை எம்.ஜி. நகரைச் சேர்ந்த கோழிப்பண்ணை உரிமையாளர் வாங்கிலி சுப்பிரமணியம். இவர் நாமக்கல், கிருஷ்ணகிரி உள்ளிட்ட இடங்களில் முட்டைக்கோழி மற்றும் பிராய்லர் கோழிப்பண்ணைகளை நடத்தி வருகிறார்.
மேலும், கோழித்தீவன ஆலை, கோழிக்குஞ்சு பொறிக்கும் ஹேச்சரீஸ், நிதி நிறுவனம் உள்ளிட்டவற்றையும் நடத்தி வருகிறார். இவர், தமிழ்நாடு முட்டைக் கோழிப் பண்ணையாளர்கள் மார்க்கெட்டிங் சொசைட்டி தலைவராகவும் பொறுப்பு வகித்து வருகிறார். அவரது அலுவலகம் நாமக்கல்லில் திருச்சி பிரதான சாலை மற்றும் கிருஷ்ணகிரியில் செயல்பட்டு வருகிறது.