• September 24, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: மழைநீர் வடி​கால்​கள் உள்​ளிட்ட பணி​களுக்​காக சாலைகளில் பள்​ளம் தோண்​டும்​போது அந்த பள்​ளங்​களை சரி​யாக மூடா​மல், சாலையை செப்​பனி​டா​மல் அப்​படியே விட்​டுச் சென்​றால் பாதிக்​கப்​படும் பொது​மக்​கள், சம்​பந்​தப்​பட்​ட​வர்​கள் மீது தாராள​மாக போலீ​ஸாரிடம் புகார் அளிக்​கலாம் என உயர் நீதி​மன்ற தலைமை நீதிபதி அமர்வு உத்​தர​விட்​டுள்​ளது.

இதுதொடர்​பாக வழக்​கறிஞர் ஸ்டா​லின் ராஜா என்​பவர் உயர் நீதி​மன்​றத்​தில் தாக்​கல் செய்​திருந்த மனு​வில் கூறி​யிருந்​த​தாவது: தமிழகம் முழு​வதும் மழைநீர் வடி​கால்​கள் அமைக்​கும் பணிக்​காக​வும், மின்​வாரி​யம், கழி​வுநீர், கேபிள் உள்​ளிட்ட இதர பணி​களுக்​காக​வும் சாலைகளில் பள்​ளம் தோண்​டும்​போது, அந்த பள்​ளங்​களை சரிவர மூடி, சாலையை செப்​பனிடு​வ​தில்​லை. இதனால் வாக​னங்​களில் செல்​வோர் பள்​ளத்​தில் விழுந்து விபத்​தில் சிக்க நேரிடு​கிறது. சில நேரங்​களில் உயி​ரிழப்பு சம்​பவங்​களும் நடக்​கிறது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *