
நீலகிரி மாவட்ட திமுக-வில் இப்போது பவர்ஃபுல் சக்தியாக இருப்பவர் எம்பி-யும் கட்சியின் துணைப் பொதுச்செயலாளருமான ஆ.ராசா தான். தான் ஊரில் இல்லாத நேரங்களிலும் தொகுதி மற்றும் கட்சி சார்ந்த விஷயங்களைக் கவனித்துக் கொள்வதற்காக தனது அக்காள் மகன் பரமேஸ்குமாரை ஊட்டியில் நிரந்தரமாக உட்கார வைத்திருக்கிறார் ஆ.ராசா. ஆனாலும் உட்கட்சி உள்குத்துகளை தவிர்க்க முடியாத சூழல் தான் ஊட்டியிலும் நிலவுகிறது.