• September 23, 2025
  • NewsEditor
  • 0

2019 மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் 38 தொகுதிகளை கைப்பற்றிய திமுக கூட்டணி, தேனி தொகுதியில் மட்டும் அதிமுக-விடம் தோற்றுப் போனது. தேனியை தங்களுக்காக கேட்டு வாங்கிய காங்கிரஸ், அங்கு இறக்குமதி வேட்பாளராக ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனைக் கொண்டுபோய் நிறுத்தியதால் ஓபிஎஸ் மகனிடம் தோற்றுப் போனது. வரலாறு இப்படி இருக்க… தேனி மாவட்டத்தில் ஒரு சட்டமன்றத் தொகுதியையாவது இம்முறை காங்கிரஸுக்கு ஒதுக்கவேண்டும் என கதர் பார்ட்டிகள் இப்போதே கலகக்குரல் எழுப்ப ஆரம்பித்திருக்கிறார்கள்.

ஒரு காலத்​தில் தேனி (அப்​போது பெரியகுளம்) மக்​கள​வைத் தொகு​தியை மட்​டுமல்​லாது தேனி மாவட்​டத்​தில் உள்ள சட்​டமன்​றத் தொகு​தி​களி​லும் ஆதிக்​கம் செலுத்​தி​யது காங்​கிரஸ். காலப் போக்​கில் அந்த நிலைமை மாறி கடந்த 20 வருடங்​களுக்​கும் மேலாக இங்கு காங்​கிரஸ் போட்​டி​யி​டாத நிலை நீடித்து வரு​கிறது. இதனால் கட்​சி​யின் வளர்ச்​சி​யும் கண்​ணுக்​குத் தெரி​யாமல் போய்​விட்​டது. இத்​தனைக்​கும் இந்த மாவட்​டத்​தில் பாரம்​பரிய​மான காங்​கிரஸ் ஓட்டு வங்கி இன்​னும் பத்​திர​மாகவே இருக்​கிறது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *