
சென்னை: வருமானத்தை மறைத்ததாக ரூ. 1.50 கோடி அபராதம் விதித்து வருமானவரித் துறை காலதாமதமாக பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக் கோரி தவெக தலைவரும், நடிகருமான விஜய் தொடர்ந்த வழக்கை உயர் நீதிமன்றம் தள்ளிவைத்துள்ளது.
தவெக தலைவரும், நடிகருமான விஜய் கடந்த 2016-17ம் நிதியாண்டுக்கான வருமான வரி கணக்கை தாக்கல் செய்தபோது அந்த ஆண்டுக்கான வருமானமாக ரூ.35 கோடியே 42 லட்சத்து 91,890 என குறிப்பிட்டு இருந்தார். அதன்படி அந்த ஆண்டுக்கான வருமானத்தை மதிப்பீடு செய்த வருமான வரித்துறை கடந்த 2015ம் ஆண்டு நடிகர் விஜய் வீட்டில் சோதனை மேற்கொண்டது. அப்போது ‘புலி’ படத்துக்கு பெற்ற ரூ.15 கோடியை தனது வருமான கணக்கில் காட்டவில்லை என வருமானவரித் துறை குற்றம்சாட்டியது.