
புதுடெல்லி: சினிமா என் ஆன்மாவின் இதயத் துடிப்பு என தாதா சாகேப் பால்கே விருது பெற்ற நடிகர் மோகன்லால் தெரிவித்துள்ளார்.
நாட்டின் உயரிய திரைப்பட விருதான ‘தாதா சாகேப் பால்கே’ விருது, மலையாள நடிகர் மோகன்லாலுக்கு வழங்கப்பட்டது. டெல்லியில் விஞ்ஞான் பவனில் நடைபெற்ற 71-வது தேசிய திரைப்பட விருது விழாவில் குடியரசு தலைவர் திரவுபதி முர்மு, அவருக்கு இந்த விருதினை வழங்கி சிறப்பித்தார்.