
விருதுநகர்: மகளிர் உரிமைத் தொகை விரைவில் கூடுதல் பயனாளிகளுக்கு வழங்கப்பட உள்ளதாகவும், இதற்காக முதல்வர் திட்டமிட்டு வருவதாகவும் தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.
விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பல்வேறு அரசு துறைகள் சார்பில் 837 பயனாளிகளுக்கு ரூ.10.84 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி, ரூ.124 கோடியில் பல்வேறு புதிய திட்டப் பணிளுக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சி மற்றும் ரூ.25.89 கோடியில் முடிவுற்ற திட்டப் பணிகளையும் திறந்துவைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.