
வள்ளியூர் சந்தையில் முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு சிலை வைக்கவும், தோரண வாயில் அமைக்கவும் அனுமதி கோரி தமிழக அரசு தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில், மக்களின் வரிப் பணத்தில் முன்னாள் தலைவருக்கு சிலை வைத்து ஏன் துதிபாட வேண்டும்? என, தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பி, வழக்கை தள்ளுபடி செய்துள்ளது.
நெல்லை மாவட்டம் வள்ளியூர் காய்கறி சந்தை நுழைவுவாயிலில் தமிழக முன்னாள் முதல்வர் கருணா நிதியின் வெண்கலச்சிலை மற்றும் அலங்கார தோரண வாயில் அமைக்க அனுமதி கோரி பால்சாமி என்பவர் உயர் நீதிமன்ற மதுரைகிளையில் மனு தாக்கல் செய்திருந்தார்.