
சென்னை: சட்டப்பேரவைத் தொகுதிகளை கண்காணித்து அறிக்கை தரவேண்டும் என்று திமுக எம்.பி-க்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.
திமுக மக்களவை மற்றும் மாநிலங்களவை எம்பி.க்கள் கூட்டம் சென்னை அறிவாலயத்தில் நடைபெற்றது. இதில் திமுக தலைவரும், தமிழக முதல்வருமான ஸ்டாலின் தலைமை வகித்தார். இந்நிகழ்வில் பொதுச் செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, நாடாளுமன்றக் குழு தலைவர் கனிமொழி எம்பி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.