• September 23, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: ​நாட்​டில் அதி​கரித்து வரும் கண் தொடர்​பான நோய்​களை உடனே கண்​டறிய சிறப்​புப் பயிற்சி வழங்க வேண்​டும் என்று டாக்​டர் அகர்​வால்ஸ் கண் மருத்​து​வ​மனை​கள் குழு​மத்​தின் முதன்மை மருத்​துவ அதி​காரி மருத்​து​வர் அஸ்​வின் அகர்​வால் தெரிவித்தார். டாக்​டர் அகர்​வால்ஸ் கண் மருத்​து​வ​மனை சார்​பில் 18-வது கல்​ப​விருக் ஷா தேசிய கண் மருத்​துவ கருத்​தரங்​கம் சென்​னை​யில் நடந்​தது.

ஆயிரம் விளக்கு எம்எல்ஏ எழிலன் நாக​நாதன் கருத்​தரங்​கைத் தொடங்கி வைத்​தார். இந்​தியா முழு​வதும் இருந்து 300-க்​கும் அதி​க​மான இளம் கண் மருத்​து​வர்​கள் கருத்​தரங்​கில் பங்​கேற்​றனர். 2 நாட்​கள் நடை​பெற்ற கருத்​தரங்​கம் முதுகலை மருத்​து​வப் படிப்பு மாணவர்​களுக்​கான குறுகிய கால தீவிர கல்​வித் திட்​ட​மாக இருந்​தது. கண் அழுத்த நோய், கரு​விழி, நரம்​பியல் சார்ந்த கண் மருத்​து​வம் உள்​ளிட்ட தலைப்​பு​களில் 30-க்​கும் மேற்​பட்ட முன்​னணி கண் மருத்​துவ நிபுணர்​கள் உரை​யாற்​றினர்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *