
சென்னை: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மேட்டூரில் இருந்து சென்னைக்கு பாதயாத்திரை மேற்கொண்ட அரசு மருத்துவர்கள் சங்கத் தலைவர் டாக்டர் பெருமாள் பிள்ளையை, சென்னையில் இருந்து நாகப்பட்டினத்துக்கு பணியிடமாறுதல் செய்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்துள்ள உயர் நீதிமன்றம், அவரை திருவள்ளூருக்கு மாற்றம் செய்ய உத்தரவிட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளின் எண்ணிக்கைக்கேற்ப மருத்துவர்களையும், செவிலியர்களையும் நியமிக்க வேண்டும். அரசு மருத்துவர்களுக்கு அரசாணை 354-ன்படி உரிய ஊதிய உயர்வு வழங்க வேண்டும். கரோனா பேரிடரில் பணியாற்றி உயிரிழந்த அரசு மருத்துவர் விவேகானந்தனின் மனைவிக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு மருத்துவர்களுக்கான சட்டப் போராட்டக்குழு தலைவரான டாக்டர் பெருமாள் பிள்ளை தலைமையில் அரசு மருத்துவர்கள் கடந்த ஜூன் 11 முதல் ஜூன் 19 வரை சேலம் மேட்டூரில் இருந்து சென்னை மெரினாவில் உள்ள முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவிடம் நோக்கி பாதயாத்திரை மேற்கொண்டனர். தேனாம்பேட்டை வந்தபோது, போலீஸாரால்