
சென்னை: தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் அக்டோபர் 14ம் தேதி தொடங்கும் என சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு, "தமிழ்நாடு சட்டப்பேரவையின் அடுத்த கூட்டத்தொடர், அக்டோபர் 14ஆம் தேதி காலை 9.30 மணிக்கு தொடங்கும். அதைத் தொடர்ந்து, 2025-26 ஆம் ஆண்டுக்கான கூடுதல் செலவுக்கான மானியக் கோரிக்கைகள் சட்டமன்றத்தில் அளிக்கப்பட்டு நிறைவேற்றப்படும்.