
விருதுநகர்: பொதுமக்களிடமிருந்து பெறப்படும் மனுக்களை விரைவாக பரிசீலனை செய்து நலத்திட்ட பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என அரசுத்துறை அலுவலர்களுக்கு தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.
விருதுநகரில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக துணை முதல்வர் ஸ்டாலின் இன்று காலை சென்னையிலிருந்து விமானம் மூலம் மதுரை வந்தார். அங்கிருந்து கார் மூலம் விருதுநகர் வந்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கு, அரசு விருந்தினர் மாளிகை அருகே திமுக சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.