
மதுரை திருமங்கலம் – வடுகப்பட்டி 4 வழிச்சாலைப் பணிகள் நிறைவுற்று வரும் டிசம்பர் 25-ம் தேதி மக்கள் பயன்பாட்டுக்கு பிரதமர் மோடி திறந்து வைக்க உள்ளதாக நெடுஞ்சாலைத் துறை வட்டாரத்திலிருந்து தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகம் மற்றும் கேரளா ஆகிய 2 மாநிலங்களை இணைக்கும் வகையில் மதுரை-கொல்லம் 4 வழிச்சாலைப் பணிக்கு கடந்த 2023-ம் ஆண்டு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். இச்சாலைப் பணியில் முதற்கட்டமாக திருமங்கலம்- ராஜபாளையம் இடையிலான 71.6 கி.மீ தூரத்தினை இரண்டாக பிரித்து பணிகள் நடைபெற்று வருகின்றன.