
தூத்துக்குடி: பிரசித்தி பெற்ற குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழா இன்று (செப்.23) காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் காப்பு கட்டி பல்வேறு வேடமணிந்தனர்.
இந்தியாவிலேயே கர்நாடகா மாநிலம் மைசூர் சாமுண்டீஸ்வரி அம்மன் திருக்கோயிலுக்கு அடுத்தபடியாக குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் திருக்கோயிலில் தான் தசரா திருவிழா வெகு சிறப்பாகவும், பிரமாண்டமாகவும் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டுக்கான தசரா திருவிழா இன்று (செப்.23) கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனை முன்னிட்டு இன்று அதிகாலையில் கோயில் நடை திறக்கப்பட்டு, அதிகாலை 5 மணிளவில் யானை மீது வைத்து கொடி பட்டம் ஊர்வலம் நடைபெற்றது.