
சென்னை: சாலை விபத்தில் மரணமடைந்த 3 கழக உறுப்பினர்களின் குடும்பங்களுக்கு திமுக சார்பில் தலா ரூ.10 லட்சம் வீதம் மொத்தம் ரூ.30 லட்சம் குடும்ப நிவாரண நிதியை திமுக தலைவர் ஸ்டாலின் வழங்கினார்.
இது தொடர்பாக திமுக சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: மதுரையில் 1.6.2025 அன்று நடைபெற்ற திமுக பொதுக்குழுக் கூட்டத்தில், மு.க.ஸ்டாலின், "கழக உறுப்பினர்கள் யாராவது எதிர்பாராத விதமாக சாலை விபத்தில் இறந்து போகும் சூழல் ஏற்பட்டால், இறந்த உறுப்பினரின் குடும்ப வாரிசுகள் 21 வயதுக்கு குறைவாக இருந்தால் அந்தக் குடும்பத்துக்கு தலைமைக் கழகத்தின் சார்பில் பத்து லட்ச ரூபாய் நிவாரண நிதியாக வழங்கப்படும். அந்தப் பிள்ளைகளின் படிப்பு, குடும்பச் சூழலுக்கு இந்த நிதி உதவும்" என்று அறிவித்திருந்தார்.