• September 23, 2025
  • NewsEditor
  • 0

தமிழக நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு, நேற்று திருச்சி யில் செய்தியாளர்களிடம் கூறியது: தவெக தலைவர் விஜய், 2 அமைச்சர்கள் இருந்தும் திருச்சி மாவட்டம் வளரவில்லை. திருவாரூர் முன்னேறவில்லை என குற்றம்சாட்டினார். ஆனால், இந்த நான்கரை ஆண்டுகால திமுக ஆட்சியில், ரூ.35,000 கோடி மதிப்பிலான திட்டங்கள் திருச்சி மாவட்டத்துக்கு வந்ததாக முந்தைய ஆட்சியர் மா.பிரதீப்குமார் ஏற்கெனவே தெரிவித்துள்ளார். எனவே, விஜய் பேசியதில் உண்மை இல்லை.

தமிழக முதல்வர். திருச்சி மாவட்டத்துக்கு மட்டுமின்றி, டெல்டா மாவட்டங்களுக்கும் நிறைய செய்துள்ளார். இதை மக்களிடம் சொல்வோம். திருவாரூருக்கு மட்டும் ரூ.2,000 கோடி திட்டங்களை முதல்வர் தந்துள்ளார். மற்றவர்கள் சொல்வதற்கு நான் பதில் கூற முடியாது. தமிழகத்தில் எத்தனை கூட்டணிகள், கட்சிகள் உருவானாலும், 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணி மகத்தான வெற்றி பெற்று, திமுக 7-வது முறையாக ஆட்சியில் அமரும். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து 2-வது முறையாக முதல்வராக பொறுப்பேற்பார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *