• September 23, 2025
  • NewsEditor
  • 0

புதுடெல்லி: ​நாகாலாந்து தேசிய சோசலிச கவுன்​சில்​-கப்​லாங் (என்​எஸ்​சிஎன்​-கே) மற்​றும் அதன் அனைத்து பிரிவு​கள், முன்​னணி அமைப்​பு​களை 5 ஆண்​டு​களுக்கு சட்​ட​விரோத அமைப்​பாக மத்திய உள்​துறை அமைச்​சகம் அறிவித்துள்ளது. வரும் செப்​டம்​பர் 28 முதல் இது அமலுக்கு வரு​கிறது.

உல்ஃபா (ஐ), பிரி​பாக், பிஎல்ஏ போன்ற பிற சட்​ட​விரோத அமைப்​பு​களு​டன் என்​எஸ்​சிஎன்​-கே இணைந்து செயல்​பட்டு வரு​கிறது. இந்த அமைப்​பிடம் இருந்து பெரு​மளவு ஆயுதங்​கள் மற்​றும் வெடிபொருட்​கள் மீட்​கப்​பட்​டுள்​ளன. மணிப்​பூரில் இந்​திய ராணுவ வீரர்​கள் மீதான தாக்​குதலை தொடர்ந்து என்​எஸ்​சிஎன்​-கே அமைப்​புக்கு மத்​திய அரசு 5 ஆண்​டு​களுக்கு தடை விதித்​தது. இத்​தடை தற்​போது மீண்​டும் நீட்​டிக்​கப்​பட்​டுள்​ளது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *