
புதுடெல்லி: குடியரசுத் துணைத் தலைவராக சி.பி. ராதாகிருஷ்ணன் பொறுப்பேற்றுக் கொண்ட பிறகு தனது முதல் பொது நிகழ்ச்சியாக பிரதமர் நரேந்திர மோடியின் உரை குறித்த புத்தக வெளீயீட்டு விழாவில் நேற்று கலந்து கொண்டார். குடியரசு துணைத் தலைவர்களாக இருந்த எம்.வெங்கையா நாயுடு மற்றும் ஜெகதீப் தன்கர் ஆகியோரும் தங்களது பதவிக்காலத்தில் பிரதமர் மோடி குறித்த புத்தகங்களை வெளியிட்டுள்ளனர்.
மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் டெல்லியில் நேற்று ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி உரை தொடர்பான புத்தகங்களை குடியரசு துணைத் தலைவர் ராதாகிருஷ்ணன் வெளியிட்டு பேசியதாவது: அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இந்தியா மீது 50% வரி விதித்தாலும் பிரதமர் மோடியை தனது சிறந்த நண்பர் என பாராட்டி வருகிறார்.