• September 22, 2025
  • NewsEditor
  • 0

திண்டுக்கல் எம்.வி.எம் அரசு மேல் நிலைப்பள்ளியில் பாரதிய ஜனதா கட்சி சார்பாக 21 சட்டமன்றத் தொகுதிகளுக்கான பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இதில் கலந்து கொள்ள வந்த தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசும்போது, “பிரதமர் நரேந்திர மோடி ஜி.எஸ்.டி வரிக்குறைப்பு குறித்துத் தெரிவித்துள்ளார்.

இதில் 90 சதவீத பொருட்களின் ஜிஎஸ்டி வரி 12 லிருந்து 5 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது. 5% ஜிஎஸ்டி இருந்த பொருள்களுக்கு 0% என வரிக்குறைப்பு செய்யப்பட்டுள்ளது.

குறிப்பாக கம்பி, சிமெண்ட்ற்கு 28% வரி இருந்ததைக் குறைத்துள்ளனர். இதன் மூலம் சிமெண்ட் விலை ரூ.50 முதல் 60 வரை குறைகிறது.

பொருட்களின் விலை குறைக்கவில்லை என நுகர்வோர் புகார் அளித்தால் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜி.எஸ்.டி | GST

கூடுதல் வரிவிதிப்பு செய்யப்பட்டிருந்த டூத் பேஸ்ட், டூத் பவுடர், ஹேர் ஆயில் மற்றும் சோப் ஆகியவற்றிற்கு 5% வரி நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பாலுக்கு வரி கிடையாது. ஏசி, இன்சுரன்ஸ் வரிகள் குறைக்கப்பட்டுள்ளது.

தற்போது வரிக்குறைப்பினால் பொருட்களை அதிகளவில் மக்கள் வாங்குவார்கள். அதன் மூலம் பொருட்கள் உற்பத்தி அதிகரிக்கும். இதனால் வேலைவாய்ப்பு அதிகரிக்கும்.

மறைமுகமாக வேலைவாய்ப்பு கிடைக்கும். மக்கள் பயன்படுத்தும் பொருட்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.

பிரதமர் மோடி
பிரதமர் மோடி

இந்தியாவில் சுதந்திரம் கிடைத்த பிறகு இதுவரை கூட்டிய வரியைக் குறைத்த அரசாங்கம் பிரதமர் நரேந்திர மோடி அரசாங்கமாக மட்டுமே இருக்க முடியும்” என்றார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/46c3KEk

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *