
சென்னை: பொதுமக்கள் மற்றும் அரசு அலுவலர்கள் வருகை அதிகரித்துள்ளதால், தென்சென்னை வருவாய் கோட்டத்தில் உள்ள கிண்டியில் புததாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கட்ட தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து, தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு: மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அமைந்துள்ள புலத்தில் 2,130 சதுரமீட்டர் நிலத்தில் புதிய பல அடுக்கு நீதிமன்ற கட்டிடம் கட்டப்பட உள்ளதால், பொதுமக்கள் மற்றும் அரசு அலுவலர்களின் வருகை அதிகரித்து கூட்ட நெரிசல் மற்றும் மக்கள் வந்து செல்ல போதிய இட வசதியின்மை ஏற்படும் நிலை உள்ளது.