• September 22, 2025
  • NewsEditor
  • 0

தஞ்சாவூர்: தமிழக அரசின் தடையை மீறி காவிரி டெல்டாவில் மீண்டும் ஷேல் காஸ் ஆய்வுக் கிணறுகள் தோண்டப்பட்டுள்ளன. இவற்றை தடுத்து நிறுத்த வேண்டும் என்று தமிழ்நாடு அறிவியல் இயக்கம் வலியுறுத்தியுள்ளது.

இது தொடர்பாக அந்த இயக்கத்தின் சூழலியல் உபக் குழு ஒருங்கிணைப்பாளர் வி.சேதுராமன் தஞ்சாவூரில் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: காவிரி டெல்டா பகுதி பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல மாக 2020-ல் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், அண்மையில் வெளிவந்துள்ள மத்திய எரிசக்தி இயக்ககத்தின் 2024-25-ம் ஆண்டறிக்கையில், ஹைட்ரோ கார்பன் திட்டங்களை தொடர்ந்து நிறைவேற்றுவதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருவது உறுதிபடுத்தப்பட்டுள்ளது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *