
மேட்டூர்: சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக-தவெக இடையேதான் போட்டி என்று தவெக தலைவர் விஜய் கூறியது அவரது தனிப்பட்ட கருத்து, மக்களின் கருத்து அல்ல என்று அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி கூறினார்.
சேலம் மாவட்டம் எடப்பாடியில் நேற்று அதிமுக நகரம், ஒன்றிய, பேரூர் கட்சி நிர்வாகிளை சந்தித்துப் பேசிய அவர், கட்சியினருடன் ஆலோசனை மேற்கொண்டார்.