• September 22, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: கடந்த 4 ஆண்​டு​களில் 37 தமிழறிஞர்​களின் நூல்​கள் தமிழ் மின் நூல​கத்​தில் நாட்​டுடைமை​யாக்​கப்பட்​டுள்​ள​தாக தகவல் தொழில்​நுட்​பத் துறை அமைச்​சர் பழனிவேல் தியாக​ராஜன் தெரி​வித்​துள்​ளார்.

இதுதொடர்​பாக அவர் வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பில் கூறி​யிருப்​ப​தாவது: தமிழரின் அறி​வுக் கரு​வூலங்​களை டிஜிட்​டல் முறை​யில் பாது​காக்​கும் நோக்​கத்​துடன், தகவல் தொழில்​நுட்​பம் மற்​றும் டிஜிட்​டல் சேவை​கள் துறை​யின் கீழ் இயங்கி வரும் தமிழ் இணை​யக் கல்விக்​கழகத்​தின் மூலம் தமிழ் மின் நூல​கம் தொடங்​கப்​பட்​டு, செயல்​பாட்​டில் இருந்து வரு​கிறது. இந்த மின் நூல​கத்​தில் இது​வரை லட்​சக்​கணக்​கான அரிய வகை நூல்​கள், இதழ்​கள், ஓலைச்​சுவடிகள் மின் பதிப்​பாக்​கப்​பட்டு பதிவேற்​றம் செய்​யப்​பட்​டுள்​ளன. இந்த பணி​களின் ஒரு பகு​தி​யாக நாட்​டுடைமை​யாக்​கப்​பட்ட நூல்​களும் மின் நூல​கத்​தில் தொடர்ந்து பதிவேற்​றம் செய்​யப்​பட்டு வரு​கின்​றன.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *