
சென்னை: நாட்டின் சிறந்த நிர்வாகத்துக்கு குடிமைப் பணியாளர்கள் தான் முதுகெலும்பு என்று கிங் மேக்கர்ஸ் ஐஏஎஸ் அகாடமியின் புதிய வளாகம் திறப்பு விழாவில் முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தெரிவித்துள்ளார்.
கிங் மேக்கர்ஸ் ஐஏஎஸ் அகாடமியின் 12-வது ஆண்டு தொடக்க விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. இதில், முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கலந்துகொண்டு, சென்னை அண்ணா நகர் மற்றும் தஞ்சாவூரில் கிங் மேக்கர்ஸ் ஐஏஎஸ் அகாடமியின் புதிய வளாகங்களை திறந்து வைத்தார்.