
மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் கொலை வழக்கில் திருத்தப்பட்ட குற்றப்பத்திரிகையை சிபிஐ நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது.
சிவகங்கை மாவட்டம் மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார், கோயிலுக்கு வந்த பெண் அளித்த நகை திருட்டு வழக்கு தொடர்பாக தனிப்படை போலீஸாரால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் தனிப்படை காவலர்கள் 5 பேர் சிபிசிஐடி போலீஸார் கைது செய்தனர். இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றக்கோரி உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் இறந்த அஜித் குமாரின் தாயார் உட்பட பலர் வழக்கு தொடர்ந்தனர்.