
ஓபிஎஸ், டிடிவி.தினகரன் கூட்டணிக்கு வந்தால் சேர்த்துக்கொள்வோம் என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கூறினார்.
மதுரை விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ஜிஎஸ்டி வரி குறைக்கப்பட்டதை நாடு முழுவதும் மக்கள் வரவேற்றுள்ளனர். பாஜக வாக்குத் திருட்டில் ஈடுபட்டதாக ராகுல் காந்தி பேசி வருகிறார். காங்கிரஸ் ஆட்சி காலத்தில்தான் வாக்குத் திருட்டு நடந்துள்ளது. நாங்கள் வாக்குத் திருட்டு செய்திருந்தால் கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக வெற்றி பெற்றிருக்க முடியாது.